ஒன்றும் அறியாத பள்ளி பருவ காதல்
இனிமையானது சுகமானது.!
முதல் காதல் யாரும் மறக்க முடியாத காதல்
நானும் விழுந்தேன் காதலில்
என்னோடு படித்தவல்
அது ஒரு கனாக்காலம்....1995
பள்ளி பருவத்தில்...
பருவ தாகத்தில்...
அவளின் நினைவு
துளிர் விட்டு மரமானது...எம் மனதில்
தொலைவில் இருந்தாலும்
வார்த்தை அம்பெடுத்து
கடிதத்தில் தொடுத்திடுவாள்...
அருகில் வந்தாலும்
ஆசைமொழி உதிர்த்திடுவாள்...
கவிதையாய்
அவள் தந்த கடிதங்கள்...
சந்தோச வான்நோக்கி
சல்லாபம் இல்லாமல்
சிலகாலம் சிறகடித்தோம்....
பின்பு
மாப்பிள்ளை எனும் வேடனிடம் அகப்பட்டு
இல்வாழ்க்கைக்கு சென்றுவிட்டாள்...
ஒற்றை சிறகோடு
எங்கு நான் பறவேன்...
காலத்தின் வினையறுத்து
கண்கலங்கி நின்றுவிட்டேன்...
அன்று
வாழ்த்த வார்த்தையின்றி
வழிமாறி வந்துவிட்டேன்...
அத்தனையும் என் பள்ளி பருவத்தில்...!
இன்று என் வாழ்க்கை தடம்மாறி
சென்றுவிட்டது....
சிலகாலம் பழகினாலும்
என் சிந்தனையில் நிற்கிரது...
என் முதல் காதல்.....!
( நா.சு.கார்த்தி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக