மகாகவிக்கு சமர்பணம்....
கவிஞன்
கற்பனை உலகில்
வாழ்கிறான் !! என
யார் சொன்னது ?...
ஒரு
கவிஞனின்
உலகில் தான்..
கற்பனையே வாழ்ந்தது.
என திருத்திக் கொள்ளுங்கள்...
உயிரைப் படைத்தவன்
இறைவன்
மட்டும் தான் !! என
யார் சொன்னது ?...
உயிர் உள்ள
கவிதைகளை
ஒரு கவிஞனும்
படைத்தான்.. என
தெரிந்து கொள்ளுங்கள்...
அடிமைத் தனத்தை
யாரும் விரும்புவதில்லை !! என
யார் சொன்னது ?...
ஒரு
கவிஞனின் கவிதைக்கு
இந்த உலகே
விரும்பி அடிமையானது..என்பதை
நினைவில் கொள்ளுங்கள்...
உயிர் படைப்பை
அழிக்கும் வல்லமை..
எமனுக்கு உண்டு !! என
சொல்பவர்களே.. இவன்
"உயிர் படைப்புகளை"..
அழிக்கும் வல்லமை
எவனுக்கு உண்டு ???...என
கொஞ்சம்
கேட்டுச் சொல்லுங்கள்...
நானும் கவி எழுது கவிஞன் என்பதை
என்னி மகிழ்ச்சி
பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை
வணங்குதல் நலன்
நா.சு.கார்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக