

ஓம் நமோ நாராயணா
வைகுண்ட ஏகாதசி
18/12/2018
வைகுண்ட ஏகாதசி விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும்.
இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது.
இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடை பெறும்.

இதில் நாம் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து பயன் அடையலாம்
விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’
என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக் கிறது.
மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.
நாமும் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொண்டு

உபவாசம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிப்போம் அவர் புகழ்பாடும் கீர்த்தனைகளை பாராயணம் செய்வோம்
இன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை காலை சொர்க்க வாசல் சென்று
நம்மிடம் உள்ள கர்வம், சிற்றின்பம், செயலற்ற தன்மை, ஆகியவற்றை துறந்து மனத்தினால் இறைவனிடம் நம்மை ஒப்படைப்பு செய்வோம்.

ஆசி அருட் பெருவோம்...
படித்ததில் எடுத்து தொகுத்தது:

நா.சு.கார்த்தி