செவ்வாய், 4 செப்டம்பர், 2018

🙏 (ஆசிரியர் தின வாழ்த்துக்கள்) 🙏











இரட்டனை கென்னடி கான்வென்ட்லயும்
இரட்டனை அரசு மேல்நிலை பள்ளிலயும்
நான் படித்த
அன்புள்ளவாத்திக்கு



வெவரம் தெரிஞ்ச ஒடனே
பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து வந்து
உங்க கிட்ட விட்டாக



அரை டவுசர தூக்கி பிடிச்சினு
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி அ,ஆ வரைஞ்ச
ஆசான்களே



அன்பால சொன்ன பாடம்லாம்
நெனப்பால நிக்குதைய்யா
தூக்கத்துல எழுப்புனாலும்
அந்த மனப்பாடம் மறக்கலய்யா



யார்யாரோ வந்தாங்க 
யார்யாரோ போனாங்க
கழுத வயச நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா உங்க நெனப்பு
மறக்காம தோணுதய்யா



பச்ச மண்ணு தான்
என்ன மனுசனா மாத்த
நீங்க பட்ட பாடு பெரும்பாடு
அடிச்சும் சொன்னீங்க 
அணைச்சும் சொன்னீங்க
அதால தான் 
எப்பவுமே மனசுல நின்னீங்க



எவ்வளவோ ஒசரம் நான் வந்தாலும்
எப்போதும் உங்கள பத்தி தான் இருக்குது என் பேச்சு
நீங்க தானய்யா என் முன்னேற்ற மூச்சு
இது நீங்க வளத்த புள்ள பேசும் பேச்சு



நீங்க நல்லா இருக்கிகிங்களோ 
இல்லையோ
உங்களால ஒசந்து இருக்கேன் 
மெய்யா
ஒரு வார்த்தையும் 
சொல்லல நான் பொய்யா



இரட்டனை கென்னடி கான்வென்ட்லயும்
இரட்டனை அரசு மேல்நிலை பள்ளிலயும்
நான் பயிலயில
எனக்கு பாடம் எடுத்த ஆசான்களே
எப்படி மறப்பேன்
எப்பவுமே என் குருவே நீங்கதானய்யா



இந்த ஆசிரியர் தினத்தில 
எனக்குல்ல 
எனக்குனு கல்வி போதிச்ச ஆசானை மனம் நினைக்குதயா
அனைத்துஆசிரியர்களுக்கும்
ஆசிரியர்தின_நல்வாழ்த்துகள்.🙏
           



           👉..... நா.சு.கார்த்தி
                      நாரேரிக்குப்பம்
                      இரட்டனை பஞ்சாயத்து
                      கைபேசி: 9884386544





                                   ( இதில் சில வரிகள் மட்டும்
                   அடுத்தவர் கவிதைகளில் இருந்து எடுத்து 
                                  நான் புதிதாக தொகுத்தது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக