திங்கள், 3 செப்டம்பர், 2018

(நினைவேந்தல்) 😢😓🙏

                         (நினைவேந்தல்)







அப்பா....
நீ வின்னுலகம் சென்று
வருடங்கள் பல கடந்தோடி விட்டது...
கண்ணீர் விழிகளுடன்
இன்று நினைவேந்தல்....





புன்னகை முகத்தோடு
பொருமையில் தர்மராகவும்.,
வீரத்தில் அர்ஜுனனாகவும்.,
கோபத்தில் பீமநாகவும்.,
வாழ்வில்
ஒற்றுமை உணர்தும் நகுல சகாதேவனாகவும்.,
எங்களோடு இருந்த அப்பா.,





நீங்கள் மகள்கள் அல்ல.
ஐய்வரும் பஞ்சபாண்டவர்கள்
என்றுரைப்பாயே அப்பா.,





பஞ்சபாண்டவர்களை காத்து நின்ற கிருஷ்ணரைப்போல...
எங்களை காத்த பகவானாய் இருந்தாயே...





அப்பா நினைத்து பார்க்கிறோம்
இந்த நினைவேந்தல் நாளில்...





எங்கள் கண்விழிகள் கலங்க வருந்துகிறோம் அப்பா....
எப்பொழுது கிடைக்கும் அப்பா உன் திருமுக தரிசனம்..😓😭😓😭




 
                               ( மகள்கள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக