எங்கள் அன்பு பேரன்
கவியரசனுக்கு
முதலாம் ஆன்டு
பிறந்த நாள் வாழ்த்துக்கள,!
வானத்தில் நட்சத்திரங்கள்
வாழ்த்து சொல்ல
வரிசையில் நிற்கின்றார்கள்,!
உனக்கு வாழ்த்து சொல்ல
ரோஜா மொத்தத் தோட்டமும்
முண்டியடித்து வருகிறது,!
தேனிலும் இனியவன்
தேகிட்டாத சுவையவன்
முள்ளில்லா மலரவன்
முகம் காட்டும் நிலவவன்,!
மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள்,!
கவர்ந்திடுவான்
விழிகளால்
கவலை தீர்ப்பான்
கனி மொழியினால,!
சுட்டி தனமாய்
கிட்ட வந்தாய்
முட்டி மோதி ஆட்டம் போட்டாய்,!
சிரித்துச் சிரித்து
எங்களை சிரிக்க வைத்தாய்
அழுதும் உன் அழகால்
சிரிக்க வைத்தாய்,!
இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறோம்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🌹
( தாத்தாக்கள் + பாட்டிகள் )
ஆக்கம் : நா.சு.கார்த்தி....👈