வியாழன், 13 செப்டம்பர், 2018

எங்கள் அன்பு பேரன் கவியரசனுக்கு முதலாம் ஆன்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள,!




எங்கள் அன்பு பேரன்
கவியரசனுக்கு
முதலாம் ஆன்டு
பிறந்த நாள் வாழ்த்துக்கள,!











வானத்தில் நட்சத்திரங்கள்
வாழ்த்து சொல்ல
வரிசையில் நிற்கின்றார்கள்,!



உனக்கு வாழ்த்து சொல்ல 
ரோஜா மொத்தத் தோட்டமும்
முண்டியடித்து வருகிறது,!



தேனிலும் இனியவன்
தேகிட்டாத சுவையவன்
முள்ளில்லா மலரவன்
முகம் காட்டும் நிலவவன்,!



மெல்ல சிரிக்கையில்
சிதறிடும் முத்துக்கள்
விம்மி வெடிக்கையில்
மிரண்டிடும் கடல் அலைகள்,!



கவர்ந்திடுவான்
விழிகளால்
கவலை தீர்ப்பான்
கனி மொழியினால,!



சுட்டி தனமாய்
கிட்ட வந்தாய்
முட்டி மோதி ஆட்டம் போட்டாய்,!



சிரித்துச் சிரித்து
எங்களை சிரிக்க வைத்தாய்
அழுதும் உன் அழகால்
சிரிக்க வைத்தாய்,!



இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறோம்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...🌹
   


         ( தாத்தாக்கள் + பாட்டிகள் )
    ஆக்கம் : நா.சு.கார்த்தி....👈

புதன், 12 செப்டம்பர், 2018

🙏வினாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்🙏



       




வினாயகர் சதூர்த்தி
வாழ்த்துக்கள்




கண் திருஷ்டி கணபதியே...
எங்கள்
கவலை தீர்க்கும் கணபதியே..!





விடியும் பொழுதில் எழுந்துவிட்டேன்...
வினாயகனே உன்னை வணங்கிவிட்டேன்..!




கொழுக்கொட்டையை விரும்பும் பிள்ளையாரே... எங்கள் எதிரியின்
கொழுப்புகளை அடக்குகின்ற பிள்றையாரே..!




உன்னை கைதொழுது
வணங்குகிறோம் எம் மக்களை
காப்பாய் என்றும் ...!!!




என் இனிய
வினாயகர் சதூர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.!!!
     



                                           👉நா.சு.கார்த்தி

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

🙏 (ஆசிரியர் தின வாழ்த்துக்கள்) 🙏











இரட்டனை கென்னடி கான்வென்ட்லயும்
இரட்டனை அரசு மேல்நிலை பள்ளிலயும்
நான் படித்த
அன்புள்ளவாத்திக்கு



வெவரம் தெரிஞ்ச ஒடனே
பள்ளிக்கு போடா மவனேன்னு
வம்படியா இழுத்து வந்து
உங்க கிட்ட விட்டாக



அரை டவுசர தூக்கி பிடிச்சினு
மூக்கொழுகி நின்னப்ப
என் சிலேட்டுல
கைபிடிச்சி அ,ஆ வரைஞ்ச
ஆசான்களே



அன்பால சொன்ன பாடம்லாம்
நெனப்பால நிக்குதைய்யா
தூக்கத்துல எழுப்புனாலும்
அந்த மனப்பாடம் மறக்கலய்யா



யார்யாரோ வந்தாங்க 
யார்யாரோ போனாங்க
கழுத வயச நான் கடந்தும்
எனக்கு வாத்தின்னா உங்க நெனப்பு
மறக்காம தோணுதய்யா



பச்ச மண்ணு தான்
என்ன மனுசனா மாத்த
நீங்க பட்ட பாடு பெரும்பாடு
அடிச்சும் சொன்னீங்க 
அணைச்சும் சொன்னீங்க
அதால தான் 
எப்பவுமே மனசுல நின்னீங்க



எவ்வளவோ ஒசரம் நான் வந்தாலும்
எப்போதும் உங்கள பத்தி தான் இருக்குது என் பேச்சு
நீங்க தானய்யா என் முன்னேற்ற மூச்சு
இது நீங்க வளத்த புள்ள பேசும் பேச்சு



நீங்க நல்லா இருக்கிகிங்களோ 
இல்லையோ
உங்களால ஒசந்து இருக்கேன் 
மெய்யா
ஒரு வார்த்தையும் 
சொல்லல நான் பொய்யா



இரட்டனை கென்னடி கான்வென்ட்லயும்
இரட்டனை அரசு மேல்நிலை பள்ளிலயும்
நான் பயிலயில
எனக்கு பாடம் எடுத்த ஆசான்களே
எப்படி மறப்பேன்
எப்பவுமே என் குருவே நீங்கதானய்யா



இந்த ஆசிரியர் தினத்தில 
எனக்குல்ல 
எனக்குனு கல்வி போதிச்ச ஆசானை மனம் நினைக்குதயா
அனைத்துஆசிரியர்களுக்கும்
ஆசிரியர்தின_நல்வாழ்த்துகள்.🙏
           



           👉..... நா.சு.கார்த்தி
                      நாரேரிக்குப்பம்
                      இரட்டனை பஞ்சாயத்து
                      கைபேசி: 9884386544





                                   ( இதில் சில வரிகள் மட்டும்
                   அடுத்தவர் கவிதைகளில் இருந்து எடுத்து 
                                  நான் புதிதாக தொகுத்தது )

திங்கள், 3 செப்டம்பர், 2018

(நினைவேந்தல்) 😢😓🙏

                         (நினைவேந்தல்)







அப்பா....
நீ வின்னுலகம் சென்று
வருடங்கள் பல கடந்தோடி விட்டது...
கண்ணீர் விழிகளுடன்
இன்று நினைவேந்தல்....





புன்னகை முகத்தோடு
பொருமையில் தர்மராகவும்.,
வீரத்தில் அர்ஜுனனாகவும்.,
கோபத்தில் பீமநாகவும்.,
வாழ்வில்
ஒற்றுமை உணர்தும் நகுல சகாதேவனாகவும்.,
எங்களோடு இருந்த அப்பா.,





நீங்கள் மகள்கள் அல்ல.
ஐய்வரும் பஞ்சபாண்டவர்கள்
என்றுரைப்பாயே அப்பா.,





பஞ்சபாண்டவர்களை காத்து நின்ற கிருஷ்ணரைப்போல...
எங்களை காத்த பகவானாய் இருந்தாயே...





அப்பா நினைத்து பார்க்கிறோம்
இந்த நினைவேந்தல் நாளில்...





எங்கள் கண்விழிகள் கலங்க வருந்துகிறோம் அப்பா....
எப்பொழுது கிடைக்கும் அப்பா உன் திருமுக தரிசனம்..😓😭😓😭




 
                               ( மகள்கள் )