திங்கள், 30 ஏப்ரல், 2018

அனைவருக்கும் எங்கள் இனிய மே தின வாழ்த்துக்கள்.......

நாங்கள்  உழைப்பாளிகள்

நாங்கள் உழைப்பாளிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
மாத சம்பளத்திற்கு
எங்களை விற்றுவிட்ட
உழைப்பாளிகள் நாங்கள்.....
வாரம் ஒரு முறை
ஜாமினில் எங்கள்
வீட்டுக்குசெல்லும்
கம்பெனி கைதிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
உனவு வேலையில் மட்டும்
வெளி உலகைப் பார்க்கும்
பிறவிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
உறங்கும் சுகத்தைக்கூட
தவனை முறையில்
அனுபவிக்கும் அதிஸ்டசாலிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
மிசினுக்கு கூட ஒய்வு உன்டாம்
மின்சார தடையால் ஆனால்
எங்களுக்கோ அதுவுமில்லை
ஜெனரேட்டர் என்னும் சாத்தானால்
கேள்வி கேட்க முடியாத
வேலிக்குள் வெள்ளாட்டு
மந்தைகளாக வாழும்
உழைப்பாளிகள் நாங்கள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள் - ஆமாம்
நாங்கள் உழைப்பாளிகள்.
அனைவருக்கும் எங்கள் இனிய
மே தின வாழ்த்துக்கள்.......
   
               நா.சு.கார்த்தி.............
               சென்னை.95
              

உழைப்பாளர் தினம் மே 01/05/2018 மற்றும் சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) மே 12/05/2018 இன் நாட்களுக்காக உழைப்பாளர்களை நினைவுகூரும் என் இனிய வாழ்துக்கள்.......

அற்புத மனிதம்....செவிலியர்!

தன் இன்பம் மறப்பர்,
பிறர் இன்பம் வாழ்த்துவார்,

தன் துன்பம் சுமப்பார்,
பிறர் துன்பத்திற்கு ஆறுதல் கூறுவார்,

பிறர் தூங்க-தன் தூக்கம் தொலைப்பர்,
அடுத்தவரின் வலி நிவாரணியாகமாறி தன் வலி பொறுப்பர்,

எல்லோரின் சகோதரமாய் எப்பொழுதும் வலம் வருவார்,

போற்றுதலுக்கு மயங்கார்,
தூற்றுதலுக்கு செவி சாய்ப்பார்,

தன்னலம் மறப்பார்,
பிறர் நலம் பேணுவார்,

பிறப்பை சொல்லி மகிழ்வார்,
இறப்பை சொல்ல தெரியாமல் தவிப்பார்,

அவர்---!!!!!!!
ஒளிவிளக்கேற்றி அல்ல
ஒளி விளக்குடன்
சத்தியப்பிரமாணம் எடுத்து
பணி புரியும்-செவிலியர்

செயல்முறையை பட்டயம் வழங்கும்,
உணர்வின் வெளிப்பாட்டை எந்த
பட்டயமும் வழங்குவதில்லை,
பணியின் அனுபவத்தால்
நல் உணர்வு குவியலாய் வாழும்
தியாகத்தின் திருஉருவங்கள்-
செவிலியர்கள்!!!!!

புண்ணியம் தேட அவசியமில்லா
அற்புத மனிதம்--

வாழ்க செவிலியர் பணி
என் இனிய உழைப்பாளர் தினம்
மற்றும்
என் இனிய சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day )
வாழ்த்துக்கள்.....

                  நா.சு.கா.......

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தாய்மாமன் வாழ்த்து

குட்டிபெண்ணே ...
அமராவதி யே...
எங்கள் அக்காள் பெற்ற அழகே...
தங்கப்பெண்ணே
என்ன வேணும்;
தயங்காம நீயும் கேளு!
தாய்மாமன்கள் நாங்கள் இருக்க...!
தடையில்ல நீயும் சொல்லு...!
கார்முகில கொண்டு
வாரோம் தங்கமயில் நீராட!
தாரகைய கோர்த்துத் தாரோம், பொன்னுமயில் நீ சூட!
வானவில்லும் வந்திடுமா கன்னங்களில் வண்ணமிட!
ராவெடுத்து மைகுழைத்து கண்களிலே தீட்டிவிட!
ஊர்மெசச சீதனமும்
நீ மெச்ச காஞ்சிப்பட்டும்
கொண்டு வரோம்
மாமன்கள் உனக்காக!
பட்டுப்பொண்ணே!
நீ சூட செண்டுமல்லி
பூத்திருக்கு-உன் விரல்
பேசும் அழகை காண வெண்ணிலவோ
தவமிருக்கு!
முத்துக்களும் சிதறுது!வெண்சங்கின் சிரிப்பொலியில்!
கதிரொளியும் கூசுது-உன் பொன்வண்ண தேகம் கண்டு…
எங்கள் அக்காள் பெற்ற
தங்கமயிலே
அமராவதி
ராசாத்தி போல் நீ
வாழ எங்கள் உள்ளம்
வாழ்த்துது-பல்லாண்டு நீ வாழ
மாமன்கள் வாழ்த்து இது.......!!!!!

                  ((( அன்பு மாமன்கள் )))
   
               கவியாக்கம்: நா.சு.கார்த்தி

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விந்தையான உலகம்…….!
விழங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய் சூரியா
வாழ வாழ்த்துகிறேன்…!

                             👍நா.சு.கார்த்தி

                                     ( ஆக்கம்)

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

விவசாயி மனம்

🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,

🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,

🌴எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,

🌴திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,

🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,

🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

இப்படிக்கு:  விவசாயி மகன்.

🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்

இந்த பதிவை அலச்சிய படுத்தாதீர்

இது விவசாயின் கண்ணீர் 😭😭😭😭😭

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

எங்கள் திருமணநாளிள் வாழ்த்திய வாழ்த்துகளுக்கு நன்றி!!!

    எங்கள் 15ஆம் ஆண்டு 
    திருமணநாளை வாழ்த்தி பல 
    வாழ்த்துக்கள் வந்தது.
    வசந்தமாய் வந்தது.
    மனமும் மகிழ்ந்தது.
    வசந்தமும் இருந்தது.
    வாழ்த்துக்கள் வந்ததும்
    நன்றிகளை நான் பகிர,
    நண்பரிடையே 
    குடும்பத்தினரிடையே 
    ஒலியலைகள்
    கைப்பேசி வழியோட,
    மீண்டும் மீண்டும் 
    பகிர்ந்துக் கொண்டோம்,
    வாழ்த்துகளையும்,  
    மகிழ்வுகளையும். ..மீன்டும் 
    இதோ 
    திருமணநாளிள் வாழ்த்திய 
    அனைத்து  நல்
    உள்ளங்களுக்கும் 
    எங்கள் மனநிறைந்த 
    நன்றி! நன்றி!! நன்றி!!!

    என வாத்துக்ககளுடன்.

                  நா.சு.கார்த்திகேயன்

         நா.கா.கோமதிகார்த்திகேயன்

வியாழன், 5 ஏப்ரல், 2018

திருமணநாள் 15ஆம் ஆண்டு தொடக்கம்

   தனிமரமாக இருந்த என்னை
    
   கரம் பிடித்து
  
   தோப்பாக்கி

    அத்தை மாமன் அண்ணி

    அண்ணன்

    மகன் மகள் என்ற உறவுகளின்

     விழுதாக்கினால் என்
     மனையாள்.

     இதோ ஆன்டு 14ஐ கடந்து 15ஐ.     

     தொடர்கிறது

     நான் காதோறம் கேட்டதுன்டு

    இல்லர வாழ்வை விட

    துறவி மேலான் என்று.

    இல்லறசுகம் சொல்ல. 
    வார்த்தையில்லாது

    ஆயிரம் ஆயிரம் மகிழ்ச்சி
    இன்பம் துன்பம்
    நிறைந்தது இல்லறம்.

    எதுகை முகனை இல்லா ஒன்றும
    இல்லை
    இவ்வுலகிள்.

   எத்துணை முறை என்
   மனையாள்
   திட்டினாலும்

   தினேஷ்அப்பா
   என்றழைக்கும் பொழுது

   அத்துனை கோபங்களும்
   மறந்து மடிந்துபோகும்.

    நான் பெற்ற மழலைச்
    செல்வங்கலின் 
    மகிழ்ச்சி சொல்ல வார்த்தை
    இல்லாது.

    மனைவிசொல்லே மந்திரம் இது
    பொய்யல்ல

    மனையாள் சொல் கேலா
    மானிடர் எவரும்

    வாழ்வில் நலம் கானாதோர் 
    என்பது

   நான் அறிந்த உன்மை.

   என் மனையாள் என் கரம்
 
   கோர்த்த இன்நாள் என் வாழ்வின்
   பௌன்நாள் திருநாள்.

    வாழ்த்துகிறேன் என்
    மனையாளை வாழ்த்துங்கள்.

    வாழ்த்துக்களுடன்

        ............நா.சு.கார்த்தி

                  (கவிதை ஆக்கம்)