அம்மா
உடல் தந்து,
உயிர் தந்து,
உணவளித்து,
உணர்வளித்து,
செல்லும் இடமெல்லாம் சிறப்பாய்
சித்தரித்து,
சிலையினும் மேலாக
சிற்பமாக செதுக்கி,
தன்னலம்
கருதாமல் அனைத்தையும் அள்ளி
தந்து,
வயதான போதிலும்,
இடையூறாக இருக்க கூடாதென்று,
முதியோர் இல்லம் சென்று,
தன்
வாழ்நாள் முழுவதும் தன் பில்லைகளுக்காகவே
வாழும்
இந்த பூவுலக தெய்வமே,
உனக்கு மகனாக பிறந்ததை
எண்ணி பெருமை கொள்கிறேன்....
வாழ்க்கைஅம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக