ஞாயிறு, 6 மார்ச், 2016

அப்பா அம்மா வாருங்கள்

பாசமான அப்பா... அம்மா...

என் கையைப்பிடித்து நடத்தி சென்றீரே
எங்கே உங்கள் காய்த்துபோன கரங்கள்...
என்னை தோள்மேலே தூக்கி பள்ளி செல்வீரே,
எங்கே உங்கள் பெரிய தோள்கள்...
கோவத்திலும் என்னைக்கண்டால் புன்னகைப்பீரே,
எங்கே உங்கள் கபடமில்லா புன்னகை,..
கடைக்கு சென்றாலும் எனக்கு மிட்டாய் வாங்கி வருவீரே,
எங்கே உங்கள் ஆரஞ்சு மிட்டாய் ...
சாப்பிடும்போது தினமும் கொடுப்பீர்களே,
எங்கே உங்கள் பிடி சோறு...
நான் அழுதால் அம்மாவை திட்டித்தீர்ப்பாயே,
எங்கே உன் கோவப்பேச்சு...
குடும்ப வருமையிலும்,
ஆயிரம் ஆயிரம் செலவிட்டு இரட்டனை கென்னடி பள்ளிக்கூடம் படிக்கவைத்தீர் .
மகனுக்கு வயசுஆச்சி என்றென்னி,
திருமணமும் நடத்தி வைத்தீர்.
கொஞ்சிவிளையாட.,
பேரன்கள் பேத்திகள் தினேஷ் சக்தி சஞ்சை மானசா பிரதாப் அமராவதி மற்றும் அனைவரையும் கன்டீர்.

நாங்கள் சுகமாக இருக்கிறோம் என்றாள் அது உங்களாளே அப்பா அம்மா.
இருப்பினும் என்னுள் ஒருகவளை

எங்களுக்காக வாழும் அப்பா அம்மா  எங்களோடு இல்லாமள்
நீங்களோ நாரேரிக்குப்பம் நம் கீராமத்தின் வீட்டினிலே இருக்கின்றீர்கள்
வா அப்பா அம்மா
எங்களுக்காக வாழ்ந்த உனக்காக வாழ்கிறோம்
நீங்கள் சுகமாயிருக்க நாங்கள் சுமக்கிறோம்
கூடி வாழ்ந்திடுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக