சித்தி.. சித்தப்பா.. உங்கள பத்தி கவி எழுத நினைக்காத நாள் இல்ல...கவி எழுத பக்கங்கள் போதாது..எத எழுத....
பள்ளிப்படிப்பை அறைகுறையாக முடித்து பிழைப்புக்கு வழியின்றி
இருந்த என்னை
சென்னைக்கு அழைத்து வந்து
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டீரே சித்தி சித்தப்பா உங்கள....நான் மரப்பேனா?
என்ன உட்கார வச்சிப்புட்டு
பத்துமாடி எட்டுமாடி
கட்டிடட வேளைபார்த்து நீயும்,
தோட்டவேளை வீட்டுவேளனு சித்தப்பாவும் என்ன வளர்த்தத..... நான் மரப்பேனா?
தன் பிள்ளைகள் அக்கா பிள்ளைகள் என்று வேற்றுமை பார்க்காத உன்னையும்,
உனக்கு தெரியாமல் அப்பப்போ பத்து இருபதுரூபாயா மறச்சி குடுத்த சித்தப்பாவயும் ....நான் மரப்பேனா?
வார நாள் முழுவதும் வேளைபார்த்துபுட்டு சனிக்கிழம சம்பளம் வாங்கி வந்து வீட்டுல வச்சிபுட்டு நீ தூங்கினதும்,
ஏதோ நன்றி மறந்த நானும் ஒருதடவ அந்த பனத்த எடுத்துட்டு ஊருக்கு ஓடினதும்,
என் தப்ப பெரியதா நீயும் நினைக்காம என்ன அரைவனைச்சத....நான் மரப்பேனா?
எனக்கு திருமணம் முடிக்க நீ பட்ட கஷ்டத்தையும், கல்யான பந்தல் கலைஞ்சுடுச்சி
வா டா சரி பன்னாத்தான் உனக்கு கல்யாணம்னு நீ சொல்லி அத்தனையும் சரிசெஞ்சி கல்யாணத்த முடிச்சி வெச்சத.... நான் மரப்பேனா?
என்று எங்கள் வாழ்க்கை புத்தகத்தில் மரக்காத முதல் அத்தியாயம் சித்தி சித்தப்பா...எப்படி மரப்பேன் உங்களை..!!!
( மகன்: நா.சு.கார்த்தி )
(கவி தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக