ஞாயிறு, 18 நவம்பர், 2018

( என் மனைவி எனக்காய் ஒரு கவிதை )



ஆயிரம் சொந்தங்களிருந்தும் 

எனக்கென வேண்டும் நீ எனக்கு ,


என் கண்ணீர் துளிகளை

துடைத்திட வேண்டும் நீ எனக்கு ,


உன் கோவ கதிர்கள் என் மீது பட்டு நான் 

தொட்டாற்சிணிங்கியாய் சுருங்கும் போது 

உன் கரங்களினால் தென்றலாய் என்னை 

தழுவிட வேண்டும் நீ எனக்கு ,


கைகளிரெண்டிலும் வளையல்கள் 

மாட்டிட வேண்டும் நீ எனக்கு 

அது கைகளை அழகூட்ட 

வேண்டுமென்பதற்கில்லை 

ஊடலிலும் கூடலிலும் அவை 

உன் நெஞ்சோடு மோதி இசைக்கின்ற 

இசையை கேட்டிட வேண்டுமென்பதற்கே,


என் கண் இமைகளில் 

மையிட வேண்டும் நீ எனக்கு 

அது உனக்கு அழகாய் தொ¢ய 

வேண்டுமென்பதற்கில்லை 

மையிடும் வேளையிலே 

உன் கண்களில் என்னழகை 

பார்த்திட வேண்டுமென்பதற்கே,



மூப்பெய்து தோள் சுருங்கி முதுமை 

அடைந்தாலும் வேண்டும் நீ எனக்கு 

அது ஒருவருகொருவர் துணை நிற்க 

வேண்டுமென்பதற்கில்லை 

இருவரும் சேர்ந்து குழ்ந்தைகளாய் மாறி 

நாம் தொலைத்திட்ட இளைமையை 

தேடிட வேண்டுமென்பதற்கே,

 

மொத்ததில் நான் வாழ்ந்திடும் 

நாட்கள் அனைத்திலும் எனக்கே 

உரியவனாய் வேண்டும் நீ எனக்கு ,


கொக்கரக்கோ...கொக்கரக்கோ...

சேவல் சத்தம் கேட்டதும்... விழித்துவிட்டேன்

அத்தனையும்...

என் கனவுலகில்..முற்றம். !!!


             நா.சு.கார்த்தி....👈

சனி, 3 நவம்பர், 2018

( சித்தி...சித்தப்பா... எப்படி மரப்பேன் உங்களை)



சித்தி.. சித்தப்பா.. உங்கள பத்தி கவி எழுத நினைக்காத நாள் இல்ல...கவி எழுத பக்கங்கள் போதாது..எத எழுத....


பள்ளிப்படிப்பை அறைகுறையாக முடித்து பிழைப்புக்கு வழியின்றி
இருந்த என்னை
சென்னைக்கு அழைத்து வந்து
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டீரே சித்தி சித்தப்பா உங்கள....நான் மரப்பேனா?


என்ன உட்கார வச்சிப்புட்டு
பத்துமாடி எட்டுமாடி
கட்டிடட வேளைபார்த்து நீயும்,
தோட்டவேளை வீட்டுவேளனு சித்தப்பாவும்  என்ன வளர்த்தத..... நான் மரப்பேனா?


தன் பிள்ளைகள் அக்கா பிள்ளைகள் என்று வேற்றுமை பார்க்காத உன்னையும்,
உனக்கு தெரியாமல் அப்பப்போ பத்து இருபதுரூபாயா மறச்சி குடுத்த சித்தப்பாவயும் ....நான் மரப்பேனா?



வார நாள் முழுவதும் வேளைபார்த்துபுட்டு  சனிக்கிழம சம்பளம் வாங்கி வந்து வீட்டுல வச்சிபுட்டு நீ தூங்கினதும்,
ஏதோ நன்றி மறந்த நானும் ஒருதடவ அந்த பனத்த எடுத்துட்டு ஊருக்கு ஓடினதும்,
என் தப்ப பெரியதா நீயும் நினைக்காம என்ன அரைவனைச்சத....நான் மரப்பேனா?


எனக்கு திருமணம் முடிக்க நீ பட்ட கஷ்டத்தையும், கல்யான பந்தல் கலைஞ்சுடுச்சி
வா டா சரி பன்னாத்தான் உனக்கு கல்யாணம்னு நீ சொல்லி அத்தனையும் சரிசெஞ்சி கல்யாணத்த முடிச்சி வெச்சத.... நான் மரப்பேனா?


என்று எங்கள் வாழ்க்கை புத்தகத்தில் மரக்காத முதல் அத்தியாயம் சித்தி சித்தப்பா...எப்படி மரப்பேன் உங்களை..!!!

           

                    ( மகன்:   நா.சு.கார்த்தி )

                             

                            (கவி தொடரும்)