01/02/2019
-----------------------சு.பாரதிக்கு-----------------------
( என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் )
-----------------------01/02/2019-------------------------------
எங்கள் தமிழ் எழுத்தின் நாயகன்
முண்டாசுக் கவிஞன்,
எட்டையபுரத்து ஏந்தல்,
மகாகவி பாரதியின் பெயர் கொண்ட
பாசமலரே...!
மகளே..!
அம்மா பாரதி,,,
உன் பிறந்தநாளை வாழ்த்தி எழுதிட.
உடனடி மை தேடினேன்
வானவில் தானாக தானமாக
முன்வந்து தன்னையே தந்தது,
வண்ண வண்ண மை ஊற்றி
உன்னை வாழ்த்தி எழுதினேன்,
எழுதப்பட்ட தாளுக்கு
சிறகுமுளைத்து ஏழு வண்ணத்தில்
வண்ணத்துப்பூச்சிகளாக
என் முன்பு அணிவகுத்து நின்று
வானில் பறந்திட அனுமதி கேட்டது,
அனுமதி தந்துவிட்டேன்..!
அம்மா பாரதி...
சற்று விழிமூடி திறந்துபார்.
உன் பிறந்தநாளுக்கு வாழ்த்திட.
படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
என் வாழ்த்தினை பாடுகிறது பார்..!
~~மகளே!
~~ பாரதி மா
~~அன்பின் சிகரமாய்
~~உழைத்து சாதித்து
~~மனம் போல் வாழ்க்கை
அமைத்து மகிழ்ந்து
~~வாழ்வில் சகலமும்
~~வசப்பட வாழ்த்துகிறேன்!
~~வாழ்க ! நீடுழி வாழ்க..!
~~வையகம் போற்றிட வாழ்க...!
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...!
சித்தப்பா...
நா.சு.கார்த்தி...✍